Monday, May 16, 2011

நான் பெரிய இலக்கிய புத்தககளை புரட்டியதில்லை.தலையில் சீப்பை வைத்துகொண்டு தேடுவதை போல இருந்திருக்கிறேன்.இந்த சீப்பை காட்டியது சினிமா கண்ணாடி.ஆல்பம் - இல் தொடங்கி அவன் இவன் வரை திரையில் நீள்கிறது உங்களது எழுத்து.உன்னாலே உன்னாலே வுக்கு பிறகு உங்களை உற்று நோக்க ஆரம்பித்தேன்.எனக்குள் இருக்கும் ஒரு குற்ற உணர்வு என்னுள் வாசிப்பு குறைவு.உங்கள் இணையதள வாசிப்புக்கு பிறகு குறைந்திருக்கிறது குற்றஉணர்வு.மழை வரும்போது குடைபிடிப்பவன் குற்றவாளி.இப்போதுதான் குடையை குறுக்கிகொண்டு உங்களது பதினெட்டாம் நூற்றாண்டு மழையில் நனைந்துகொண்டு இருக்கிறேன்.இன்னும் என் மனதை ஈரபடுத்தி கொண்டே இருக்கிறது.



View S RAMAKRISHNAN's post

1 comment: