Wednesday, July 6, 2011

நாட்டு நடப்பு

நான் உனக்கு முத்தம்
தந்தேன்
திரும்பி தாராமல் திருப்பி கொள்கிறாய்
சமச்சீர் கல்வியை எப்படி சரி செய்வது

நீ பேசுவதற்காகவே
தனி மொழி கேட்பேன்
எதுக்கு இன்னொரு தெலுங்கனா பிரச்சனை

கோவிலுக்குள் நீ !
பொதுமக்களுக்கு தாமதமாகத்தான் தெரிகிறது
தங்க புதையல் இருப்பது

இருளிலும் அழகாகத்தான் இருக்கிறாய்
இரண்டு மணி நேர பவர் கட்

நீ ஓவியம் பேசும்
கவிதை
கவிதைகள் செய்த
ஓவியம்

ஒரு இனத்தை அதன் இனத்தோடு
சேர்ப்பது தவறில்லை
பூக்களை பறித்தேன் அவளுக்காக
பூக்களை பறிக்கலாம் தவறில்லை

8 comments:

  1. "ஒரு இனத்தை அதன் இனத்தோடு
    சேர்ப்பது தவறில்லை
    பூக்களை பறித்தேன் அவளுக்காக
    பூக்களை பறிக்கலாம் தவறில்லை"

    இப்படியும் சிந்திக்கிறாரே இந்த நவ யுக கண்ணதாசன்

    ReplyDelete
  2. அழகான உவமை...ரசனையான வரிகள்

    ReplyDelete
  3. ரொம்ப நல்லாருக்கு.... அழகான காதல்....

    ReplyDelete
  4. கோவிலுக்குள் நீ !
    பொதுமக்களுக்கு தாமதமாகத்தான் தெரிகிறது
    தங்க புதையல் இருப்பது


    "indha varigal nalla irruku"

    ReplyDelete