Friday, July 22, 2011

தெரியாமலே போகட்டும்


வீதியெங்கும் விழாகோலம்
சாலையெங்கும் வர்ணஜாலம்

காது ஜவ்வு கிழிந்து போகும்
குழாய் ரேடியோ குரைத்துகொண்டு இருந்தது

சூரிய வெப்பத்தை பொருட்படுத்தாமல்
பம்பரமாய் சுழன்று
இலைகளை நறுக்கிக்கொண்டு இருந்தார்கள்
கிடா விருந்துக்கு ..........

தலைதெறிக்க ஓடி வேலை
செய்வது
தன் தலைவனின் பிறந்தநாளுக்காக
சுப்ரமணிய சிவா
நீ மீண்டும் அவதரித்தால் விழா எடுத்து
உன்னையும் வீணாக்கி விடுவார்கள்
உன் பிறந்த நாள் இவர்களுக்கு தெரியாமலே போகட்டும்

4 comments:

  1. சமூகத்திற்காக சவுக்கடி தங்கள் கவிதை....

    ReplyDelete
  2. நல்ல வேலை என்னுடைய பிறந்த நாளும் யாருக்கும் தெரியாது...

    ReplyDelete
  3. வணக்கம் ,உங்களது பதிவுஒன்றினை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளேன் நண்பரே நேரம் இருக்கும்போது பார்த்துச் செல்லவும் .நன்றி
    http://blogintamil.blogspot.in/2012/02/blog-post_28.html

    ReplyDelete