Monday, August 8, 2011

போலாம் ரைட்


என் பிரியமானவர்களுக்கு

என் வாழ்வில் நான் லயித்து போன விசயங்களில் ஒன்று பேருந்து.அது என் பயணத்தின் போது காதலிக்க படவில்லை.அது நான் சிறுவயதில் ஆச்சரியத்தின் உரு வாக பாத்திருக்கிறேன் .அப்போது பதிந்து போனது என்னுள் அதன் பிம்பம்.ஜன்னலோரம் அமர்ந்து மரங்களை பின்னோக்கி தள்ளிவிட்டு காற்றை கிழித்துக்கொண்டு போகும்போது உண்டான உணர்வு என் உதிரத்தில் ஒட்டிகொண்டது..இதை நான் பதிவு செய்யலாம் என்று எடுத்த ஒரு முயற்சி....ஒரு சில வரிகள் .........நான் ஆக்கும் பானை சோறு பதமா என்று எனக்கு தெரியாது..ஒரு சில பருக்கைகளை உங்களோடு பகிர்ந்துகொண்டிருக்கிறேன்..ருசித்து விட்டு சொல்லுகள்..உங்கள் முடிவு என் பதிவுக்கு ஆரம்பம்..... போலாம் ரைட்




ஏழைகளின் ஏரோப்ளேன் நீ!
நீ குடிப்பது டின் பால் இல்லை டீசல் பால் !

மழையில் நனைகிறாய்
வெயிலிலும் வேலை பார்க்கிறாய்
தாமதத்தின் காரணம் மனிதனாக இருந்தாலும்
சொல்லுவது பஸ் லேட்டு !

காதல் ,காமம்,இசை,தூக்கம்,
இதை எல்லாம் தரும் உன்னை
எப்படி எந்திரம் என்று சொல்ல !

1 comment:

  1. பேருந்து பயணத்தில்தான் அதிக அனுபவங்கள் கிடைக்கும்...

    ReplyDelete