Wednesday, September 28, 2011
வாசிக்க மறந்த மனிதர்கள்
எதிர்வீட்டு மாடியை எதிர்பார்த்து
காத்திருந்தது
ஒரு காகம்
பக்கத்துவீட்டு பராமரிப்புக்காக
வந்திறங்கியது
ஒரு லாரி மண்
அதில் குதித்து விளையாடும் சிறுவர்கள்
விரட்டியடிக்கும் வீட்டுகாரர் ..
பாண்டி,கபடி,கோலிகுண்டு,பம்பரம்
விளையாட
சிறுவர்கள் வீதியில் இல்லை
ஜெனரேட்டர் வசதியுடன்
கேம்ஸ் சென்டர் அருகில் இருப்பதால்
கொத்தனார் வேலைக்கு
பேரம் பேசிக்கொண்டு இருந்தார்கள்
தினக்கூலிகள்
இருந்த மின்சக்தியும்
நீர்த்துபோய் செத்துப்போனது
செல்போன்
ஒருநாள் மின்சாரம் இல்லை....
வாசிக்க மறந்த மனிதர்களை
வாசித்துக்கொண்டு இருந்தேன்
வாசலில் அமர்ந்து..............
Subscribe to:
Post Comments (Atom)
arumai..
ReplyDeletenandru anna!!!
ReplyDeletehm nalla iruku da raja
ReplyDelete