Thursday, October 31, 2013

“எது எடுத்தாலும் 20 ரூபா”





அம்மா மூக்குத்திய
அடகு வைச்சு
பத்தாயிரம் பணம் வாங்கி 
பனியன் ஜட்டி வியாபாரம்.....

அம்மாவின் நகையெல்லாம்
அங்குசாமி அடகுகடை(ல்)யில்  
முங்கியிருக்க மீதம் அவள் பெயரில்
இருப்பது “தங்க(ம்)மும்
மூக்குத்தியும் தான்...

அதிகமாக பஞ்சர் ஒட்டிய
சைக்கிளில் பண்டல்களாக
காட்டிக்கொண்டு
பக்கத்துக்கு டவுனுக்கு பயணமாகிறார் அப்பா...
கூடவே நானும்

தனது பாரத்தை பிளாட்பாரத்தில்
இறக்கி
கடை பரப்புகிறார் அப்பா...

“எது எடுத்தாலும் 20 ரூபா
கூவு எனை ஏவினார்
அப்பா...

5 பூமார்க் பீடி ஒன்று
அப்பா வாயில்
சாம்பலாய் செத்துக்கொண்டு இருந்தது...

உயிருக்கு போராடிய
நிலையில் கீழே விழுந்தது
பீடி

கனன்று கொண்டிருந்த
பீடியை
கருணைக்கொலை செய்தது
ஒரு சொட்டு மழை...

நான் அன்னாந்து ஆகாசம் பார்த்தேன்..

வங்ககடலை
வழித்து போடுவது போல
ஆரம்பமானது
அடைமழை....

மூட்டை கட்டிய
பனியன்களோடு மூலையில்
நின்றோம் நாங்கள் ...

பூமியில் எல்லா பரப்புகளும் ஈரமாயின
எங்கள் மனதை தவிர....

தீப ஒளியை
அணைத்து போனது திடீர் மழை...

மழை
இயற்கையின் கொடையா??
இல்லை

பிழையா???

No comments:

Post a Comment