வாலி
இரண்டெழுத்து இலக்கியம்
பாடலே உன் மேல்
பள்ளிகொண்ட
ரெங்கராஜன் நீ !
நீ ஜிப்பா அணிந்த வெண்பா !
நீ புகையிலை போடும் புறநானூறு !
மெட்டுக்கு பாட்டா
பாட்டுக்கு மெட்டா
துட்டுக்குத்தான் பாட்டு
என பொட்டில் அடித்து சொன்னவன் நீ !
பாடல் நாடாவால் திரையரங்கை
கட்டிபோட்ட
திருவரங்கம் !
தேசிய விருதுக்கு கமிட்டி
கேட்டது பயோடேட்டா
நீ சொன்னாய் விருதுக்கே
டாட்டா !
உன் பேனா கர்ப்பத்தில்
பிறந்தன 15,000 பாடல் குழந்தைகள் !
சக்கரவல்லிகிழங்கு சர்ச்சை
ஏற்கனவே
இயக்குனர் எழுதிய பாடலுக்கு
உன் intial போட்டது தான் பிரச்சனை...
M.G.R தொடங்கி S.T.R வரை
சிவாஜி தொடங்கி ஷ்யாம் வரை
இன்னும் பத்து ஆண்டுகள் இருந்தால்
ரஜினியின் பேரனுக்கும்
அறிமுக பாடலை
அமர்களப்படுத்திஇருப்பாய்
No comments:
Post a Comment