Monday, October 14, 2013

வாலி





வாலி 

இரண்டெழுத்து இலக்கியம் 


பாடலே உன் மேல் 
பள்ளிகொண்ட
ரெங்கராஜன் நீ !

நீ ஜிப்பா அணிந்த வெண்பா !

நீ புகையிலை போடும் புறநானூறு !

மெட்டுக்கு பாட்டா

பாட்டுக்கு மெட்டா

துட்டுக்குத்தான் பாட்டு

என பொட்டில் அடித்து சொன்னவன் நீ !


பாடல் நாடாவால் திரையரங்கை

கட்டிபோட்ட

திருவரங்கம் !

தேசிய விருதுக்கு கமிட்டி

கேட்டது பயோடேட்டா

நீ சொன்னாய் விருதுக்கே

டாட்டா !

உன் பேனா கர்ப்பத்தில்

பிறந்தன 15,000 பாடல் குழந்தைகள் !


சக்கரவல்லிகிழங்கு சர்ச்சை

ஏற்கனவே

இயக்குனர் எழுதிய பாடலுக்கு

உன் intial போட்டது தான் பிரச்சனை...


M.G.R தொடங்கி S.T.R வரை

சிவாஜி தொடங்கி ஷ்யாம் வரை

இன்னும் பத்து ஆண்டுகள் இருந்தால்

ரஜினியின் பேரனுக்கும்

அறிமுக பாடலை

அமர்களப்படுத்திஇருப்பாய்

No comments:

Post a Comment